ஷா ஆலம், ஏப்ரல் 30: செலாயாங் மாநகராட்சி (எம்.பி.எஸ்) ரவாங் பெர்டானா 5 இல் உள்ள தடுப்பு இடிந்து விழுந்த பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்து அதன் நிலச் சுமையைக் குறைக்கும்.
ரவாங் மாநகராட்சி உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறுகையில், குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க மாவட்டப் பேரிடர் குழு அருகிலுள்ள உள்ள சாலையையும் மூடியது.
“எம்.பி.எஸ் அங்குள்ள வடிகால்களை சுத்தம் செய்ய முயற்சிக்கும், ஆனால் நில உரிமையாளர் மீண்டும் சட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி அப்பணியைத் தடுக்காமல் இருக்க வேண்டும்.
“சம்பந்தப்பட்ட பகுதி தனியார் சொத்து என்பதால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று சுவா வெய் கியாட் கூறினார்.
மாவட்ட மற்றும் நில அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் நில உரிமையாளரைச் சந்தித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவரின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டு அந்நில உரிமையாளரால் செலாயாங் மாநகராட்சியின் சட்டப்பூர்வமான கடிதம் வழங்கப் பட்டதால் கேன்வாஸ் நிறுவும் பணி தடைபட்டது.
“எனவே நானும் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங்கும் நில உரிமையாளரைப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்போம்,.
நேற்று பெய்த கனமழையால் ரவாங் பெர்டானா 5, ரவாங் பகுதியில் மண் நகர்வு மற்றும் சரிவு ஏற்பட்டது.
2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இதே சம்பவம் நடந்து அங்குள்ள சுமார் 60 குடும்பங்களின் பாதுகாப்பைப் பாதித்தது.