NATIONAL

சிலாங்கூரில் எட்டு மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 30: சிலாங்கூரில் உள்ள எட்டு மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) கூற்றுப்படி, அவை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டங்கள் ஆகும்.

இதே வானிலை தான் கோலாலம்பூர், புத்ராஜெயா, பெர்லிஸ், திரங்கானு, மலாக்கா, லாபுவான் மற்றும் பிற எட்டு மாநிலங்களில் சில பகுதிகளைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :