SELANGOR

ஜெரம் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனை மிகவும் உற்சாகமாக இருந்தது

கோலா சிலாங்கூர், மே 8: ஒரு மணி நேரத்திற்குள் 200 வரிசை எண்கள் முடிந்துவிட்ட
நிலையில் இன்று ஜெரம் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனை மிகவும்
உற்சாகமாக இருந்தது.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (பிகேபிஎஸ்) கால்நடை மேலாளர்
கூறுகையில், பொதுமக்கள்  இந்த வாய்ப்பைபயன்படுத்தி   திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுகளுக்கு பொருட்களை
வாங்குவதோடு அன்றாட தேவைக்கான பொருட்களையும் வாங்கி கொண்டனர்.

“இன்றைய வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. இறைச்சி அதிகம்
விற்பனையாகும் பொருளாக இருந்தது. குடியிருப்பாளர்கள் அன்றாட தேவைக்கான
பொருட்களையும்  அதிகமாக வாங்குகிறார்கள் என்றார் அவர்.

அதுமட்டுமில்லாமல் சிலர் விருந்துகளை ஏற்பாடு செய்வதற்காகவும் பொருட்களை
வாங்குகிறார்கள், ஏனென்றால் நாம் இன்னும் ஐடில்பித்ரியின் கொண்டாட்ட
மனநிலையில் இருக்கிறோம், என்று நூருல் ஹனிஸ் வான் ஹுசைன் கூறினார்.


Pengarang :