கிள்ளான், மே 11: மே 14 அன்று செந்தோசா தொகுதியில் நடைபெற உள்ள தூய்மை & பசுமை நிகழ்ச்சியுடன் கவர்ச்சி நடை (ஃபன் வாக் கிளீன் & கிரீன் ‘Fun Walk Clean & Green’) நிகழ்வில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப் படுகிறார்கள்.
500 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்ட இந் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு இங்குள்ள தாசிக் பண்டார் பொட்டாணிக்கில் நடைபெறும் என அதன் பிரதிநிதி டாக்டர் ஜி குணராஜ் தெரிவித்தார்.
“இந்த நிகழ்வில் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம் மற்றும் பெற்றோர்கள் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய நடவடிக்கையில் தங்கள் குழந்தைகள் ஈடுபட இந்நிகழ்விற்கு அழைத்து வரலாம்.
“ஒவ்வொரு ‘செக் பாயின்ட்’ பகுதியிலும் வழங்கப்படும் வினாடி வினாக்கள் மூலம் பங்கேற்பாளர்களின் அறிவைச் சோதிப்பதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
நேற்று ஃபன் வாக் கிளீன் & கிரீன் செந்தோசா ஸ்டேட் அசெம்பிளி 2023 ஐ தனது சமூகச் சேவை மையத்தில் துவக்கி வைக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
டாக்டர் ஜி குணராஜ் கூறுகையில், ஆர்வமுள்ளவர்கள் மே 12ஆம் தேதி வரை https://bit.ly/
“ஆன்லைனில் பதிவு செய்ய நேரம் இல்லாதவர்கள் இருந்தால், அவர்கள் மே 14 அன்று நேரடியாக வந்து இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் டி-ஷர்ட்டைப் பெற வாய்ப்பில்லை.
“இந்த வார இறுதியில், பொதுமக்கள், குறிப்பாகச் செந்தோசா தொகுதியில் வசிப்பவர்கள், தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இந்த நடவடிக்கையில் பங்கேற்க அழைக்கிறேன், ஏனெனில் அவர்களுக்குப் பல அற்புதமான பரிசுகளும் காத்திருக்கின்றன,” என்று அவர் கூறினார்.
மேலும், மறுசுழற்சி செய்வதற்கான பொருட்களை கொண்டு வருமாறு டாக்டர் ஜி குணராஜ் கேட்டு கொண்டார். மூன்று கிலோகிராம் பொருட்களைச் சேகரிப்பவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
நிகழ்ச்சியில் ஜூம்பா நடவடிக்கை, மரங்கள் நடுதல், கூடைப்பந்து, இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் மற்றும் ஸ்கிம் மெஸ்ரா உசியா எமாஸ் பதிவு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.