NATIONAL

உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், மே 19: உலு சிலாங்கூர் மாவட்டத்தில் இன்று மாலை
இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும்
என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ், கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர்
ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலைதான் இருக்கும் என்று
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில், சபா மற்றும் சரவாக்கில் சில இடங்களிலும் இதே
வானிலைதான் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி) க்கு மேல் மழை
பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள்
தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப் படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்

வழங்கப் படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு
என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது
myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :