NATIONAL

திவாலாகும் தரப்பினரில் 35 முதல் 44 வயது வரையிலானோரே அதிகம்- மக்களவையில் தகவல்

ஷா ஆலம், மே 24- திவாலானவர்களில் அதிகமானோர் 35 முதல் 44
வயதுக்குட்பட்டோராக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த
2019ஆம் ஆண்டு முதல் இதுவரை திவாலானவர்களில் 13,073 பேர் இந்த
வயதுக்குட்பட்டவர்களாவர்.

இக்காலக்கட்டத்தில் 55 வயதுக்கும் மேற்பட்ட 5,297 பேரும் 25 வயதுக்கும்
கீழ்ப்பட்ட 107 பேரும் திவாலானதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்டம்
மற்றும் நிர்வாக முறை சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான்
கூறினார்.

இக்காலக்கட்டத்தில் மிக அதிகமான ஆண்கள் அதாவது 25,104 பேர்
திவாலான வேளையில் பெண்களின் எண்ணிக்கை 8,912ஆக இருந்தது
என்று அவர் தெரிவித்தார்.

இன ரீதியாக பார்க்கையில் மலாய்க்காரர்களே அதிகம் திவாலானார்கள்.
திவால் பட்டியலில் சேர்க்கப்பட்ட மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 19,791
ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

மக்களையில் இன்று 2023ஆம் ஆண்டு திவால் சட்டத்திருத்த மசோதா
மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்
இதனைக் கூறினார்.


Pengarang :