ஷா ஆலம், ஜூன் 20: ஜூலை மாதம் ரோடா டாருல் எஹ்சான் திட்டத்தின் (ரைட்) மூலம் கிட்டத்தட்ட 2,000 ஆன்-கால் தொழிலாளர்கள் RM550 உதவியைப் பெற்றனர் என்று இளைஞர் மேம்பாட்டு எஸ்கோ தெரிவித்தார்.
மேலும் துணைப் பொருளாதாரத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக 1 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக டத்தோ மந்திரி புசார் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மானியம் வழங்கப்படுவதாக முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.
“இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 6,000 ஆன்-கால் தொழிலாளர்கள் ரைட் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் மொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கையில் பாதி பேருக்கு மட்டுமே எங்களால் உதவ முடிந்தது.
“1 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை பெற்றால் மேலும் அதிக விண்ணப்பதாரர்கள் பயனடைய முடியும்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
முன்னதாக, ரைட் திட்டத்தின் மூலம் அதிகமான ஆன்-கால் தொழிலாளர்கள் பயன்பெறக் கூடுதல் ஒதுக்கீட்டை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்த ஆண்டு, மாநில அரசு 3,000-க்கும் மேற்பட்ட ஆன்-கால் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக RM2 மில்லியனை ஒதுக்கியது, அவர்கள் ஒவ்வொருவரும் RM500 ரொக்கமாகவும், RM50 மதிப்புள்ள சேமநிதி (EPF) பங்களிப்புகளையும் பெற்றனர்.
குறிப்பாகக் கோவிட்-19 தொற்றுநோய் க்குப் பிறகு, சமூகம் இந்தத் துறையைச் சார்ந்திருப்பதைத் தொடர்ந்து அத்துறையின் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு உணர்ந்ததால் 2020 இல் ரைட் உருவாக்கப்பட்டது.