NATIONAL

வாழும் வரை நலத்திட்ட உதவிகளைப் பெறுவதை உறுதி செய்வதே முதியோருக்கான ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ்சின் நோக்கம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 7: ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வாழும் வரை நலத்திட்டங்கள் வழி உதவிகள் வழங்கும் வாய்ப்பை உறுதி செய்வதே முதியோருக்கான மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டத்தின் (SMUE) நோக்கமாகும்.

முதியவர்களுக்கு வவுச்சர்கள் வழங்கப்படும் நிகழ்வில் உரை நிகழ்த்திய டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, முதியோர் உயிருடன் இருக்கும் போதே பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் “2019 முன் தொடங்கப்பட்ட திட்டம் வயதானவர்கள் இறந்த பிறகுதான் பணம் கொடுத்தது

 அதனால், தற்போது ஒவ்வொரு ஆண்டும் 60 வயது முதியவர்களுக்கு அவர்கள் இருக்கும் வரை ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. மேலும், வவுச்சர்களின் மதிப்பும் RM150ஆக அதிகரிப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூரின் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் நேற்றிரவு ஜெலாஜா மடாணி நிகழ்வில் தாமான் மேடான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் எந்திரங்களைத் தொடங்கிவைத்த பின்னர் இவ்வாறு கூறினார்.

பெரிகத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சமீபத்திய அரசியல் உரையில், முதியோர் நலனை மாநில அரசு பாதுகாக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அமிருடின் தலைமையில் மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் இறப்புக்கான உதவி எதுவும் இல்லாததால் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர்.


Pengarang :