NATIONAL

சுங்கை துவா தொகுதியில் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்- அமிருடின் நம்பிக்கை

கோலாலம்பூர், ஜூலை 29: சுங்கை துவா தொகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கோம்பாக், சுங்கை பூசு தேசிய இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற வேட்பு
மனுத்தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு
கூறினார்.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத்
தேர்தலில் பாரிசான் நேஷனல் ஆதரவுடன் மாநிலத்தை தக்க வைத்துக்
கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.


Pengarang :