NATIONAL

ஒன்பது வயது சிறுவன் வீட்டில் இறந்து கிடந்தான்

தைப்பிங், ஜூலை 31: நேற்று காலை தாமான் பங்லிமா, அசாம் கும்பாங்கில் உள்ள வீடு ஒன்றில் ஒன்பது வயது சிறுவன் இறந்து கிடந்தான்.

காலை 11 மணியளவில் அச்சிறுவன் இறந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தைப்பிங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப்துட் ஹமீட் கூறினார்.

“காவல்துறையினர் மற்றும் தைப்பிங் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரணத்தை உறுதிப்படுத்தியது,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

D10 பேராக் ராயல் மலேசியன் காவல்துறை தடயவியல் குழு சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதாகவும், இறப்புக்கான காரணத்தைத் தீர்மானிக்க உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக தைப்பிங் மருத்துவமனை தடயவியல் துறைக்கு எடுத்துச் சென்றதாகவும் ரஸ்லாம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தை காவல் துறையினர் திடீர் மரணம் என வகைப்படுத்தி உள்ளனர், என்றார்.

– பெர்னாமா


Pengarang :