SELANGOR

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மதியம் வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று மதியம் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை கோலா சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என முகநூல் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இதே வானிலை பெர்லிஸ், கெடா, பகாங், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்க ஆகிய மாநிலங்களிலும் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :