NATIONAL

டிரெய்லர்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

ஈப்போ, ஆகஸ்ட் 17: சிமெண்ட் மற்றும்  தர்பூசணி களை ஏற்றி சென்ற இரண்டு டிரெய்லர்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் இறந்து விட்டனர். இந்த விபத்து கோப்பெங் மற்றும் தபா இடையே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) கிலோமீட்டர் 317.5 இல் நேற்று மாலை நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் நான்கு சக்கர வாகனம் ஒன்றும் சிக்கி இருந்ததால் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன் கூறினார்.

“சிமெண்ட் மற்றும் தர்பூசணிகள் டிரெய்லர்களின் ஓட்டுனர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,“ என்று அறிக்கை ஒன்றில் சயானி தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு சக்கர வாகன ஓட்டுனர் (பெண்) காயம் ஏற்பட்டு தபா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :