NATIONAL

இன்று பிற்பகல் வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 3: இன்று பிற்பகல் வரை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர்
மற்றும் உலு லங்காட்டில், மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கனமழை
எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதே வானிலைதான் கிளந்தான், பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான்,
ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி
நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப்
பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :