NATIONAL

சிலாங்கூரில் அனைத்து மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை – மெட்மலேசியா

ஷா ஆலம், அக் 19: இன்று இரவு 7 மணி வரை சிலாங்கூரில் அனைத்து
மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும்
என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே வானிலை தான் பெர்லிஸ், பேராக், புத்ராஜெயா, கோலாலம்பூர், கெடா, கிளந்தான்,
திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சபா மற்றும் சரவாக் ஆகிய
மாநிலங்களிலும் நிலவும் என்று முகநூல் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :