SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டாராக இஞ்சினியர் செரேமி நியமனம்

ஷா ஆலம், அக் 27- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ
பண்டாராக இஞ்சினியர் செரேமி தர்மான் இன்று பதவியேற்றார்.
இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் இன்று நடைபெற்ற மாநகர்
மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் முன்னிலையில்
59 வயதான செரேமி தனது பதவி உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.

டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட்டின் பதவியை
செரேமி ஏற்கவிருக்கிறார். டாக்டர் நோர் புவாட் இப்போது போக்குவரத்து
அமைச்சின் நிர்வாகப் பிரிவுக்கான துணைத் தலைமைச் செயலாளராக
நியமனம் பெற்றுள்ளார்.

சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகப் பிரிவில் இளங்கலைப்
பட்டப்படிப்பை முடித்துள்ள செரேமி, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்
உள்பட பல ஊராட்சி மன்றங்களில் பணியாற்றிய அனுபவத்தைக்
கொண்டுள்ளார்.

கடந்த 2020 ஆகஸ்டு மாதம் முதுல் 2022 டிசம்பர் வரை செலாயாங்
நகராண்மைக் கழகத்தின் துணைத தலைவராகவும் இவர் பதவி வகித்தார்.


Pengarang :