Budget

பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 2.65 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 10 – மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கான உதவித் திட்டத்தை மாநில அரசு அடுத்தாண்டும் தொடரவுள்ள நிலையில் இந்த நோக்கத்திற்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடியே 65 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை உருவாக்கும் நோக்கிலான இந்த திட்டத்தை மாநில அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அமல் படுத்தி வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்திற்கு பள்ளி நிர்வாகங்களிடமிருந்து சிறப்பான ஆதரவு கிடைத்து வருவதாகக் கூறிய அவர், இவ்வாண்டில் மட்டும் 988 பள்ளிகள் பயனடைந்துள்ளன என்றார்.

அடுத்தாண்டில் பள்ளி கட்டமைப்பு பேரிடர் மறுசீரமைப்பு நிதித் திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுகிறது என்று இன்று மாநில சட்டமன்றத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.


Pengarang :