Budget

வறுமை ஒழிப்பு புளுபிரிண்ட் திட்டம் வெ.21 லட்சம் நிதி ஒதுக்கீட்டுடன் தொடரும்

ஷா ஆலம், நவ 10 – வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வசதி குறைந்தவர்களுக்கு
உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட புளுபிரிண்ட் வறுமை ஒழிப்பு
பெருந்திட்டத்தை இவ்வாண்டில் தொடர்வதற்கு மாநில அரசு 21 லட்சம்
வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வர்த்தகத்திற்கு தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கும் இந்த
திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களையும்
சேர்ந்த 334 பேர் பயனடைந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டிலும் இந்த திட்டத்தை தொடர மாநில அரசு உறுதி
பூண்டுள்ளதாக கூறிய அவர் இந்நோக்கத்திற்காக 2024 வரவு செலவுத்
திட்டத்தில் 21 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்கள் தங்கள் தயாரிப்பு பொருள்களை
பிரபலபடுத்துவதற்கு ஏதுவாக புளுபிரிண்ட் விழாவை நடத்துவதும் மாநில
அரசு அமல்படுத்தவுள்ள புதிய திட்டங்களில் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :