Budget

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 381 பேராகக் குறைந்தது

கோலாலம்பூர், நவ 11- சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை
இன்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 101 குடும்பங்களைச்
சேர்ந்த 381 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

நேற்றிரவு இந்த எண்ணிக்கை 110 குடும்பங்களைச் சேர்ந்த 529 பேராக
இருந்தது.

மாநிலத்திலுள்ள எட்டு துயர் துடைப்பு மையங்களில் அவர்கள்
அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகச் சமூக நலத் துறையின் பேரிடர்
தகவல் மையம் கூறியது. அந்த மையங்களில் ஐந்து சிப்பாங்
மாவட்டத்திலும் மூன்று கோல லங்காட்டிலும் திறக்கப்பட்டுள்ளன.

பேராக் மாநிலத்தில் வெள்ள பாதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஹிலிர்
பேராக் மற்றும் கிரியான் மாவட்டங்களில் உள்ள ஐந்து நிவாரண
மையங்களல் 150 குடும்பங்களைச் சேர்ந்த 496 பேர் இன்னும்
தங்கியுள்ளனர்.

ஹிலிர் பேராக் மாவட்டத்தில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேரும்
கிரியான் மாவட்டத்தில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் தற்காலிக
நிவாரண மையங்களில் அடைக்கம் நாடியுள்ளனர்.


Pengarang :