SELANGOR

தற்போதைய வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதில் மலிவு விற்பனை உதவுகிறது

ஷா ஆலம், பிப் 13: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனையானது தற்போதைய வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதில் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறையும் எஹ்சான் ரஹ்மா விற்பனை பாயா ஜெராஸ் பகுதியில் நடைபெறும் போது அன்றாடத் தேவைகளை வாங்கும் வாய்ப்பை தவற விடுவதில்லை என்று சைதோன் சைனுன் (64), கூறினார்.

வரிசை எண்ணைப் பெற சீக்கிரம் வர வேண்டிய நிலை இருந்தபோதிலும், இந்நிகழ்ச்சியை சீராக நிர்வகித்ததை முதியோர்கள் பாராட்டினர்.

இன்று புக்கிட் ரஹ்மான் புத்ரா கூடைப்பந்து மைதானம் 7/2 இல் நடந்த மலிவு விற்பனையில்,  பொருட்களின் தரம் மற்றும் அவற்றை மலிவு விலையில் வழங்குவதே முக்கியமானது” என்று மேலும் கூறினார்.

இதே கருத்தை தெரிவித்துள்ள இல்லத்தரசி நானி முகமட் (42), பொதுமக்கள் பல்வேறு பொருட்களைச் சந்தை விலையை விட மலிவாகப் பெறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தாவிட்டால், அது நஷ்டம் என்றார்.

ஒவ்வொரு வாரமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மலிவு விற்பனை மூலம் மக்களின் சுமையைக் குறைக்க உதவும் மாநில அரசின் முயற்சியையும் அவர் பாராட்டினார்.

“சிலாங்கூரை விட மற்ற மாநிலங்கள் இப்போதுதான் பொருட்களை மலிவாக விற்கத் தொடங்கியுள்ளதை நான் காண்கிறேன். ஒரு கோழியின் விலை RM10 மட்டுமே, வெளி சந்தையில் அதே விலையை எங்கே பெறப் போகிறோம்?” என விளக்கினார்.

இதற்கிடையில், அப்பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற மலிவு விற்பனையில் பொதுமக்களின் ஆதரவைக் கண்டு குடியிருப்புக் குழுத் தலைவர் இங் கோக் சுவான் திருப்தி அடைந்தார்.

“வரிசை எண் அழைக்கப்படும்போது காத்திருக்கும் வசதி குறித்து பெரும்பாலான வருகையாளர்கள் நேர்மறையான கருத்துக்களை வழங்குகிறார்கள். பண்டிகை காலங்களில் இது நடத்தப்பட்டாலும், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருட்களை வாங்க வந்தனர்,” என்று அவர் கூறினார்.


Pengarang :