ஷா ஆலம், பிப் 21: சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ பள்ளி உதவிக்கான விண்ணப்பம் எதிர்வரும் மார்ச் 19 வரை திறந்திருக்கும்.
இந்த உதவிக்குத் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளரின் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு மற்றும் பெருநிறுவன தகவல் தொடர்புத் தலைவர் தெரிவித்தார்.
“RM100 பள்ளி உதவிக்கான விண்ணப்பம் நேற்று முதல் திறக்கப்பட்டது. உதவி பெறுபவர்களின் பெயர்களை தொகுதி சட்டமன்ற அலுவலகம் சேகரித்து எம்பிஐயிடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கும்.
“ஒவ்வொரு பகுதியிலும் 300 மாணவர்களைக் கொண்ட 56 மாநில சட்டமன்றங்களிலும் மொத்தம் 16,800 பெறுநர் களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பத்தின் இறுதித் தேதிக்குப் பிறகு உதவி வழங்கப்படும்,” என்று அஹ்மட் அஸ்ரி சைனால் நோர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
இந்த ஆண்டு பள்ளி அமர்வுக்குக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 16,800 மாணவர்களுக்கு RM1.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக எம்பிஐ அறிவித்தது.
கடந்த ஆண்டு, சிலாங்கூர் மக்கள் கல்வித் திட்டம், பள்ளி உதவி மற்றும் உள்கட்டமைப்பு நன்கொடைகள் உள்ளிட்ட கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக மாநிலத்தின் துணை நிறுவனம் RM10 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்தது.
மேலும், 2021 முதல் கடந்த ஆண்டு வரை கல்வி நிறுவனங்களுக்கு RM25.5 மில்லியன் உதவி வழங்கியதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.