கோலாலம்பூர், மார்ச் 13 – சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் காரணமாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்லி அகமது இன்று அதிகாலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதோடு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியம் பெறவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.