ஷா ஆலம், மே 10: செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் (SCCC) நடைபெற்ற எம்பிஐயின் ஐடில்பித்ரி நல்லெண்ண விழாவில் 1,500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

எம்பிஐக்குச் சொந்தமான 24 நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவரது குடும்பத்தினர், மாநில அரசின் உயர்மட்ட தலைவர்கள், பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அந்த 24 நிறுவனங்களில் சிலாங்கூர் முதலீட்டு நிறுவனம், கழிவு மேலாண்மை நிறுவனம், சிலாங்கூர் சொத்து கழகம் (KHSB), செமெஸ்தா (KSSB) மற்றும் சிலாங்கூர் சுற்றுலா நிறுவனம் ஆகியவை அடங்கும்.

நாட்டின் பிரபல பாடகர் டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசாவின் சிறப்பு நிகழ்ச்சியுடன் விழாவும் கலகலப்பாக இருந்தது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம் எம்பிஐ குழுமத்தை அனைத்து ஏஜென்சிகளுடன் ஒன்றிணைப்பதாகும் என எம்பிஐ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி சாய்போல்யாசன் எம் யூசோப் கூறினார்.