கோலாலம்பூர், மே 21: இன்று இரவு 9 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து உள்ளூர் ஊடகளின் வழியும் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாட்டு நடப்பு மற்றும்  வெளி உறவுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள்  உள்ளடக்கிய உரையாக இது விளங்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும்,  இந்த வாய்ப்பை பிரதமர் நன்கு பயன்படுத்துவார் என்று  எதிர்பார்க்கப் படுகிறது.

இன்று முகநூல் பதிவு ஒன்றில், “தயவுசெய்து நண்பர்களே கலந்து கொள்ளுங்கள்,” எனஅவர்  அழைப்பு விடுத்திருந்தார். இச்செய்தி பெர்னாமா டிவி (Astro 502), RTM மற்றும் பல தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிபரப்பப்படும்.

– பெர்னாமா