ANTARABANGSA

காஸா போரில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,232 பேராக உயர்வு

காஸா, ஜூன் 14- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள்
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நடத்தி வரும்
தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,323 பேராக
அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் நேற்று கூறின.

மேலும், இந்த தாக்குல்களில் இதுவரை 85,037 பேர் காயமடைந்துள்ளதாக
பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில்
மேலும் 30 பேர் பலியானதோடு 105 பேர் காயமுற்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களை மீட்புக் குழுவினர் அடைய முடியாத சூழலில்
மேலும் பெரும் எண்ணிக்கையிலானோர் கட்டிட இடுபாடுகளிலும்
சாலைகளிலும் சிக்கித் தவிப்பதாக வட்டாரங்கள் கூறின.


Pengarang :