SELANGOR

நான்கு தொகுதிகளில் இலவசச் சுகாதார பரிசோதனைத் திட்டம் தொடரும்

ஷா ஆலம், ஜூலை 4: இந்த மாதத்தில் பாயா ஜாராஸ், டெங்கில், சுங்கை துவா மற்றும் பத்து தீகா ஆகிய தொகுதிகளில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதார பரிசோதனைத் திட்டம்  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வு ஜூலை 6இல் பண்டார் பாரு சுங்கை பூலோ எம்பிஎஸ்ஏ மெராத்தி மண்டபம் (பாயா ஜாராஸ்), ஜூலை 7இல் டெங்கில் பொது மண்டபம் (டெங்கில்), ஜூலை 14இல் கம்போங் மெலாயு வீரா டாமாய் பொது மண்டபம் (சுங்கை துவா) மற்றும் ஜூலை 20இல் கம்போங் குவாந்தான் பல்நோக்கு மண்டபம் (பத்து தீகா) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இதயம், சிறுநீரகம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், கண்கள், காதுகள்
மற்றும் பற்கள் போன்ற சுகாதார பரிசோதனைகளை வழங்கும் இத்திட்டத்தில்
பங்கேற்குமாறு சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் பொதுமக்களை
அழைக்கிறார்.

“செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

”செலங்காவில் பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 1800 226 600
என்ற எண்ணில் “Selcare“ஐ தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில்
தெரிவிக்கப்பட்டது.


Pengarang :