SELANGOR

நாளை மற்றும் ஞாயிறு அன்று 10 இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூலை 12: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மற்றும் ஞாயிறு அன்று மேலும் 10 இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

நாளை கம்போங் உலு சுசோ பொது மண்டபம் (தஞ்சோங் சிப்பாட்), சூராவ் அம்பாங் செளஜானா கார் நிறுத்தும் வளாகம் (லெம்பா ஜெயா), செங்கால் செக்‌ஷன் 24 மண்டபம் (பத்து தீகா), கம்போங் குபு காஜா (பாயா ஜாராஸ்) மற்றும் தாமான் செராஸ் உத்தாமா பாலாய் ராயா (பலகோங்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

மேலும், ஞாயிறு அன்று எம்பிகேகே கம்போங் குவாங் நிலையம் (குவாங்), மஸ்ஜிட் அர்- ரிட்வான் பெக்கான் ஜெராம் (ஜெராம்), 4/71, செக்‌ஷன் 4, பண்டார் பாரு பாங்கி (சுங்கை ராமால்), பண்டார் புக்கிட் ராஜா மெக்டோனால் வளாகம் (பண்டார் பாரு கிள்ளான்) மற்றும் தாமான் பிங்கிரான் பத்து கேவ்ஸ் பொது மண்டபம் (கோம்பாக் செத்தியா) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை தொடரும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5
கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :