ஷா ஆலம், ஜூலை 17: பத்து தீகா தொகுதியில் நடைபெறவுள்ள சிலாங்கூர் இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்தில் பங்குகொள்ள முதலில் வருகை புரியும் பார்வை குறைபாடுடைய 20 பங்கேற்பாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும்.
எதிர்வரும் சனிக்கிழமை கம்போங் குவாந்தன் கிராமத்தின் பல்நோக்கு மண்டபத்தில் சிலாங்கூர் இலவசச் சுகாதார பரிசோதனை திட்டம் நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரோன் கூறினார். இந்தத் திட்டம் மூக்கு கண்ணாடியை வாங்குவதற்கு மானியங்களையும் வழங்குகிறது.
“மேலும், இந்நிகழ்வில் நாங்கள் கண் பரிசோதனை கவுண்டரையும் திறப்போம். இது குடியிருப்பாளர்கள் தங்கள் கண்களைச் சரிபார்ப்பதை எளிதாக்குகிறது.
“எனவே முதல் 20 கண் பரிசோதனை பங்கேற்பாளர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படும்.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதாக டேனியல் கூறினார்.
இத்திட்டம் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குடியிருப்பாளர்கள் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.
பிசியோதெரபி அமர்வுகளை நடத்துவதோடு கூடுதலாகப் பல் மற்றும் காது பரிசோதனைகள் உட்பட பல சேவைகள் வழங்கப்படுவதுடன் கடந்த ஆண்டு இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு பட்ஜெட் மூலம், இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்தை தொடர RM3.2 மில்லியன் ஒதுக்குவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.