பாரிஸ், ஆகஸ்ட் 1: இன்று நடைபெற்ற ஒலிம்பிக் 2024 மகளிர் இரட்டையர் பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் தேசிய மகளிர் இரட்டையர்களான பேர்லி தான் – மு.தீனா ஜோடி ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வெற்றியாளர்களான தென் கொரியாவின் சூ இயோங்- கோங் ஹி யோங் இணையை விறுவிறுப்பான ஆட்டத்தில் தோற்கடித்தனர்.
அவர்கள் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-12, 21-13 என்ற நேர் செட்
கணக்கில் இந்த அக்னி பரீட்சையில் வெற்றி அடைந்து நாட்டு மக்கள் அனைவரையும்
இன்பக் கடலில் மிதக்க வைத்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை குழு நிலை இறுதி ஆட்டத்தில் உலகின் ஒன்பதாம் நிலை
பூப்பந்து இரட்டையர்களான இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு-சித்தி ஃபாடியா
சில்வா ராமதாந்தியை தங்களின் அபாரமான ஆட்டத்தின் மூலம் இந்த இளம் ஜோடிகள்
தோற்கடித்து குறிப்பிடத்தக்கது.