NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 143 பேர் தற்காலிக தங்கும் மையத்தில் தஞ்சம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 6: இன்று காலை 8 மணி நிலவரப்படி உலு பெர்ணம், உலு
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 143 பேர் கம்போங் சுங்கை செலிசெக்
பல்நோக்கு மண்டபத்தின் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) இன்னும்
தஞ்சமடைந்துள்ளனர்.உலு சிலாங்கூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலகத்தை தொடர்பு கொண்டபோது,
நேற்று இரவு பதிவான 141 பேருடன் ஒப்பிடும் போது, தற்போது எண்ணிக்கை சற்று
அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் சுங்கை செலிசெக், செரிகல, சுங்கை நீலாம்,
பள்ளி, மசூதி மற்றும் பய லெபார் ஆகிய ஆறு கிராமப் பகுதிகளிலும் வெள்ளம் முற்றாக
வடிந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன், பல்வேறு அரசு நிறுவனங்களின்
உதவியுடன், அவர்களின் வீடுகளைச் சுத்தப்படுத்தும் பணி இன்று கூட்டாக
மேற்கொள்ளப்படும்.

– பெர்னாமா


Pengarang :