ஷா ஆலம், ஆக 12 – சிலாங்கூர் மக்களுக்கு விமான இயந்திர பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பயிற்சியை மாநில அரசு வழங்குகிறது. இந்த ஓராண்டு காலப் பயிற்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு பெறும் பயிற்சி மாணவர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்படும்.
எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் மற்றும் ஜி.இ. எஞ்சின் சர்வீஸ் மலேசியா சென். பெர்ஹாட் நிறுவனங்களின் ஏற்பாட்டிலான இந்த பயிற்சிக்கு வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கள நிபுணர்களால் மேற்பார்வையிடப்படும் இம்மாணவர்கள் வான் போக்குவரத்து துறை மற்றும் தொழில் துறை சார்ந்த பயிற்சிகளையும் பெறுவர். ஜி.இ. எஞ்சின் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்குரிய வாய்ப்பும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும்.