SELANGOR

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிலாங்கூர் அரசாங்கம் உறுதியாக உள்ளது

கோம்பாக், ஆகஸ்ட் 13: எதிர்காலத்தில் குடியிருப்பாளர்கள் சிறந்த வாழ்க்கை முறையை அனுபவிக்க உதவும் வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிலாங்கூர் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

உயர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு இடையேயான பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் மூலம் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன, இது மக்களுக்கு உதவுவதில் மடாணி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

அதுமட்டுமில்லாமல், தற்போது புகார்கள் மீது கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வலுவூட்டல் திட்டத்தைத் திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இருப்பினும், அதிக வருமானம் பெறுபவர்களுக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்… இதைத்தான் நவம்பர் அல்லது டிசம்பரில் தாக்கல் செய்யப்படும் 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நாங்கள் விவாதிக்க உள்ளோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 22 சிறு வணிகர்களுக்கு கோம்பாக் நாடாளுமன்றத்தின் மித்ரா நன்கொடைகளையும், பத்து கேவ்ஸ் மற்றும் புக்கிட் மெலாவத்தி தமிழ்ப்பள்ளிகளுக்கு மடிக்கணினிகளையும் அமிருடின் வழங்கினார்.

மேலும், கோம்பாக் நாடாளுமன்றத்தில் ஆதரவற்றோருக்கான நன்கொடையையும் அவர் வழங்கினார், ஆறு நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.

பின்னர் மேடன் செலேரா AU5, உலு கிளாங்கில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பிஏஜே AU5 பல்நோக்கு மண்டபத்தில் நன்கொடை வழங்கினார்.

இதற்கிடையில், இல்லத்தரசி, எம் மகேஸ்வரி (34) சரியான நேரத்தில் பெற்றதாகக் கருதிய உதவியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

“கடந்த வாரம்தான் என் கணவர் வேலையை விட்டுவிட்டு. பள்ளியில் படிக்கும் நான்கு குழந்தைகளை ஆதரிக்க வேண்டியதால் பணம் தேவை. இந்த உதவியைப் பெறுவது மட்டுமல்லாமல், வணிக உரிமமும் அங்கீகரிக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நானும் எனது கணவரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், அந்த பணத்தை பயன்படுத்தி அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வடை, பானிபூரி விற்கும் தொழிலை தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.


Pengarang :