NATIONAL

சிலாங்கூர் பொது காப்பீட்டுத் திட்டத்திற்கு (இன்சான்) விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 19: 30 நாட்கள் முதல் 80 வயது வரை உள்ள சிலாங்கூர் குடிமக்கள் சிலாங்கூர் பொது காப்பீட்டுத் திட்டத்திற்கு (இன்சான்) விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

இலவச ஷரியா-இணக்க பாதுகாப்பு திட்டக் கொள்கை 3 ஆகஸ்ட் 2024 முதல் 3 ஆகஸ்ட் 2025 வரை நடைமுறையில் இருக்கும் என்று எம்பிஐ கூறியது.

தக்காஃபுல் காப்பீடு மூலம், இறப்பிறகு RM11,000, வெளிநாட்டில் இறப்பு (RM21,000), நிரந்தர ஊனம் (RM10,000) மற்றும் 30 நாட்கள் வரை வார்டில் அனுமதிக்க ஒரு நாளைக்கு RM50 என தனிநபர்கள் உதவித்தொகையாக காப்பீடு பெறுகிறார்கள்.

“மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியில், விபத்துக்கள் மற்றும் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது பாதுகாப்பு வழங்குவதற்கு மாநில அரசால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தக்காஃபுல் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

“விண்ணப்பதாரர்கள் சிலாங்கூரில் வசிப்பவராகவும்  உள்ளூர் அடையாள அட்டை  முகவரி  கொண்ட  சிலாங்கூர் வாக்காளர்கள், என்ற சிலாங்கூர் மாநிலக் குறியீட்டைக் கொண்ட அடையாள அட்டை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். .

“மேலும் தகவலுக்கு www.programinsan.com ஐப் பார்வையிடவும் அல்லது போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்” என்று தெரிவிக்கப்பட்டது.


Pengarang :