NATIONAL

பண்டார் சன்வேயில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்

சுபாங் ஜெயா, ஆக.21- பண்டார் சன்வேயில் நேற்று மாலை துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய
சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான்
மாமாட், இதன் தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் அறிக்கை வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்
பெட்டாலிங் ஜெயா, பி.ஜே.எஸ். வட்டாரத்தில் நேற்று மாலை சுட்டுக்
கொல்லப்பட்டதாக டத்தோ ஹூசேன் பெர்னாமா தொடர்பு கொண்ட போது
கூறினார்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட இந்த அதிரடி
நடவடிக்கை இரவு 7.00 மணிக்கு நிகழ்ந்தது என அவர் சொன்னார்.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் பல கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :