NATIONAL

திராட்சை பறிக்கும் அனுபவம் பெற வாய்ப்பு – சிலாங்கூர் புரூட் வெளி

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சிலாங்கூர் புரூட் வெளி வருகையாளர்களுக்கு இப்போது
வேளாண் சுற்றுலா மையத்தில் திராட்சை பறிக்கும் அனுபவத்தைப் பெற வாய்புள்ளது.

திராட்சை பறிக்கும் நடவடிக்கைக்குக் கூடுதலாக, லாமன் ஆங்கூரில் உள்ள புதிய
அம்சங்கள் பார்வையாளர்களை பழ பண்ணையை பார்வையிட ஈர்க்கிறது என்று
சிலாங்கூர் புரூட் வெளி தெரிவித்துள்ளது.

இப்போது சிலாங்கூர் புரூட் வெளியில் நாங்கள் புதிய தளத்தை (டூர் ஸ்டாப்)
திறக்கிறோம். அது லாமன் அங்கூர் ஆகும். நீங்கள் அனைவரும் இங்கு புதிய
அனுபவங்களை பெறலாம்.

பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள, 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட பழப்
பண்ணை ஒவ்வொரு சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 4
மணி வரை திறந்திருக்கும்.

012-343 2971 அல்லது 016-688 0792 அல்லது [email protected] என்ற
மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுச் சீட்டு விலை குழந்தைகள் மற்றும்
மூத்த குடிமக்களுக்கு RM15, பெரியவர்களுக்கு RM20 ஆகும்.

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான டிக்கெட்
விலை RM30 மற்றும் பெரியவர்களுக்கு RM35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Pengarang :