SELANGOR

ஷா ஆலமில் மாபெரும் வேலை வாய்ப்பு சந்தை 5,000 பணியிடங்களை நிரப்ப அரிய வாய்ப்பு

ஷா ஆலம், செப் 27- வரும் அக்டோபர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு சந்தை நடைபெறவுள்ளது.

சுமார் 5,000 வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய இந்த சந்தையில் 60 முதலாளிகள் பங்கேற்பதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

தொழில் துறை, உணவு மற்றும் பான தயாரிப்பு, சுகாதாரம்,சேவை, தகவல் தொழில் நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஷா ஆலமில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு சந்தை தவிர்த்து சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் இதேபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க மேலும் 103 முதலாளிகள் முன்வந்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க விரும்புவோர் http://nfdot.com/ereg/views/jobfair என்ற அகப்பக்கம் வாயிலாகவும் Pusat Jobs Malaysia Selangor  எனும் முகநூல் வழியாகவும் அல்லது 03-55247740 மற்றும் 03- 55231309 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :