ஷா ஆலம், அக் 31- ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவச பஸ் சேவையை அடுத்தாண்டில் தொடர 2 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த இலவச பஸ் சேவையை மாநிலத்திலுள்ள 11ஊராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வருவதாக மாநில சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
இந்த சேவையை மேற்கொள்வதற்கு தேவைப்படும் தொகையில் மேலும் ஐம்பது லட்சம் வெள்ளியை ஊராட்சி மன்றங்கள் வழங்கும் எனவும் அவர் சொன்னார்.
வலுவான நிதி நிலையைக் கொண்டுள்ள ஊராட்சி மன்றங்கள் இந்த இலவச பஸ் சேவைக்கான செலவினத்தில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.