சிலாங்கூர் புத்தக கண்காட்சி டிசம்பர் 2 ஆம் தேதி ஆரம்பம்

ஷா ஆலம், நவ 2-  சிலாங்கூர் புத்தகக விழா வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.   ஷா ஆலம் மாநாட்டு மைமத்தில் (எஸ்.ஏ.சி.சி) நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெறும்படி   பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிலாங்கூர் பொது நூலகக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த புத்தக விழா காலை வார நாட்களில் 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். புத்தக விற்பனை கவர்ச்சிகரமான தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவதோடு  பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறும்.


Pengarang :