ஷா ஆலம், அக்.9: கோம்பாக் செத்தியா சட்டமன்றத்தில் உள்ள 180 குறைந்த வருமானம் கொண்ட இந்திய குடும்பங்களுக்கு நேற்று தீபாவளியை முன்னிட்டு RM100 ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
செலாயாங் பாருவில் உள்ள ஸ்ரீ டெர்னாக் சூப்பர் மார்க்கெட்டில் விநியோகிக்கப்பட்ட பற்றுச் சீட்டுகள் , உபகரணங்களை வாங்குவதில் பெறுநர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஏ ரஹீம் கஸ்டி கூறினார்.
“ஸ்ரீ டெர்னாக்கில் நேற்று மொத்தம் 180 பேர் பெற்றனர், இரண்டாவது ஒப்படைப்பு அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறும்.
“இந்த நன்கொடை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் வகையில் இந்திய மக்களுக்கு சுமையைக் குறைக்கும் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று அவர் சிலாங்கூர்கினியை தொடர்பு கொண்டபோது கூறினார்.
அவரது கூற்றுப்படி, மாநில சட்டமன்றம் மொத்தம் 400 நபர்கள் தீபாவளி ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற தகுதியுடையவர்கள் என அடையாளம் கண்டுள்ளது என்றார்.
ஜோம் ஷாப்பிங் ராயா என்பது குறைந்த வருமானம் பெறும் குழுக்களைக் குறிவைத்து, மாநில அரசால் அறிமுகப் படுத்தப் பட்டது, இது மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கு கை கொடுக்கும் ஒரு நீண்ட கால முயற்சியாகும்.
ஒவ்வொரு இனம் மற்றும் சமய விழா கொண்டாட்டத்தின் போதும் வழங்கப்படும் இந்த உதவி, மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட உதவும் முக்கிய கூறுகளாகும்