HEALTH

நாட்டில் நேற்று 1,672 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று  1,672  புதிதாக கோவிட்-19 சம்பவங்கள்  உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29  நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மிக அதிகமாக  619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில்  கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர்.

நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை  36,667 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று 2,722  கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் 
சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. 

மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

-சிலாங்கூர்: 619  
 -கோலாலம்பூர்: 134
-கெடா: 133 
-சபா: 103 
கிளந்தான்: 77 
-மலாக்கா: 89 
-பினாங்கு: 81
-சரவாக்: 80 
-பேராக்: 66 
-பகாங்: 46 
-நெகிரி செம்பிலான்: 84 
-திரெங்கானு: 57 
-புத்ராஜெயா: 52 
-ஜோகூர்: 39 
-லாபுவான்: 9 
-பெர்லிஸ்: 3

Pengarang :