SELANGOR

ஸ்ரீ எரா அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர் விநியோகச் சிக்கலைத் தீர்க்கத் தனிப்பட்ட மீட்டர்களை நிறுவவும்

ஷா ஆலம், டிச 8: இங்குள்ள ஸ்ரீ எரா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், அப்பகுதியில் தண்ணீர் விநியோகம் தடைபடும் பிரச்சனையைத் தீர்க்க கூட்டு மேலாண்மை அமைப்பை (ஜேஎம்பி) நிறுவக் கேட்டுக்கொண்டுள்ளனர்

செந்தோசா மாநிலச் சட்டமன்ற (ADN) உறுப்பினர், பில் நிலுவைத் தொகை RM1.1 மில்லியனை எட்டியதால் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சனையை சமாளிக்க குறைந்த விலை வீட்டுப் பகுதியில் வசிப்பவர்களின் வசதிக்காக கூட்டு மேலாண்மை அமைப்பது மிக முக்கியமானது என்றார்.

“கூடுதலாக, எதிர்காலத்தில் இதே பிரச்சனை மீண்டும் வராமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி மீட்டர்களை நிறுவவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம்,” என்று டாக்டர் ஜி குணராஜா சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

முன்னதாக, அபார்ட்மெண்டில் உள்ள சுமார் 360 குடும்பங்கள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பிரச்சனையை எதிர்கொண்டனர், ஆனால் சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு மையத்தோடு தொடர்புடைய அ பிரச்சனை தீர்க்கப்பட்டது குடியிருப்பாளர்கள் RM15,000 செலுத்தியதன் மூலம் நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்க முடிந்தது.

”இங்குள்ள வீடுகளுக்குத் தனி மீட்டர் பொருத்த படாததால், பிரச்சனை ஏற்படுகிறது. தங்களுடையப் பில்களை செலுத்துவதில் ஒத்துழைக்காத குடியிருப்பாளர்கள் உள்ளனர், குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகள் உள்ளன, மேலும் சில குடியிருப்பாளர்கள் நிலுவைத் தொகையை தாங்களாகவே தீர்க்க முயற்சிக்கின்றனர்.

“இப்பிரச்சினையை தீர்க்க உதவுவதற்கு ஜிஎம்பி (JMB) மற்றும் மேலாண்மை அமைப்பு (MC) இல்லாததால் நிலைமை மோசமாகிறது,” என்று அவர் கூறினார்.

குணராஜா, பேச்சுவார்த்தையின் மூலம், குடியிருப்பாளர்கள் 10,000 ரிங்கிடை மாதாந்திர தவணை முறையிலும் மற்றும் தற்போதையே பில்களை செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.


Pengarang :