SELANGOR

மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

ஷா ஆலம், டிச.20: வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்
அவர்களின் குடும்பங்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அடுத்த வாரம்
நடைபெறவிருந்த மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஓர்
அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு சிலாங்கூர் மாநில அரசு தலா 500,000
ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது. #கித்தாசிலாங்கூர் 2022 வெள்ள உதவி நன்கொடை,
பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் அவலத்திற்கு அனுதாப அடையாளம் என டத்தோ
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதற்கிடையில், ஐந்தாவது நாளாகப் பத்தாங் காலி நிலச்சரிவில் காணாமல் போன 9
பேரைத் தேடும் பணி இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.


Pengarang :