HEALTHNATIONAL

நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 857ஆகக் குறைந்தது- மூவர் மரணம்

ஷா ஆலம், டிச 23- நாட்டில் நேற்று 857 கோவிட்-19 நோய்த் தொற்று
சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து
வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 14,590 பேர் கோவிட்-19 நோய்த்
தொற்றின் தீவிர தாக்கத்தைக் கொண்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின்
கே.கே.நாவ் அகப்பக்கம் கூறியது.

அவர்களில் 93.8 விழுக்காட்டினர் அல்லது 13,85 பேர் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 859 பேர் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 46 பேர் தீவிர
சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 1,119 பேர் குணமடைந்தனர்.
இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த
எண்ணிக்கை 49 லட்சத்து 69 ஆயிரத்து 828 ஆகப் பதிவாகியுள்ளது.

கோவிட்-19 தொடர்புடைய மூன்று மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோய்க்குப் பலியானவர்கன்
எண்ணிக்கை 36,824 ஆக உயர்வு கண்டுள்ளது.


Pengarang :