ஷா ஆலம், டிச 28 - இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தெங்கு பெர்மைசூரியின் மகள் நூர் அமாண்டா முஸ்தாபா கமாலின் பட்டமளிப்பு விழாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி கலந்து கொண்டனர். சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் தங்கியிருந்தனர். நூர் அமாண்டா தெங்கு பெர்மைசூரியின் மூத்த மகள் என்று சிலாங்கூர் அரச அலுவலகம் முகநூல் பதிவில் கூறியது. இருபத்து இரண்டு வயதான நூர் அமாண்டா, அப்பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.