பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளன –  சுபாங் ஜெயா மாநகராட்சி

 ஷா ஆலம், ஜன. 10: சுபாங் ஜெயா மாநகராட்சியால் (MBSJ) பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான விற்பனையைப் பொதுமக்களிடம் நடத்த உள்ளது.

 இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும்.

உணவகங்கள், சைபர் மையங்கள் மற்றும் கார் கழுவும் கடைகள் ஆகிய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளன..

அந்த விற்பனையில் 471 நாற்காலிகள், 69 மேசைகள் , 17 கூடாரங்கள் மற்றும் 10 முச்சக்கரவண்டிகள் உட்பட 736 பொருட்கள் உள்ளன.

“அதுமட்டுமின்றி, 115 மடிக்கணினிகள், 42 கணினிகள், 33 கணினித் திரைகள் மற்றும் பல மின்சார பொருட்களும் உள்ளன,” என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பொருட்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை அகற்றுவதற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய கூடுதல் தகவல் https://www.mbsj.gov.my/ms/node/2182 வழி பெறலாம்.


Pengarang :