NATIONAL

சிலாங்கூரில் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், ஜன 14: சிலாங்கூரில் ஏழு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அம்மாவட்டங்கள் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகும். மேலும், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலைதான் இருக்கும் என்று மெட்மலேசியா ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

கெடா, கிளந்தான், பேராக், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக்கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :