NATIONAL

நேற்று நாடு முழுவதும் மொத்தம் 1,649 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன

கோலாலம்பூர், ஜன 25 – ஒப் செலாமாட் 19 இன் ஏழாவது நாளான நேற்று (ஜனவரி 24) நாடு முழுவதும் மொத்தம் 1,649 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மாட் காசிம் கரீம் கூறுகையில்,  இந்த விபத்துகளில் 2,002 வாகனங்கள் சம்பந்தப் பட்டிருப்பதாகவும் அதில் கார்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அதிகம் (1,492) பதிவாகியுள்ளன என்றும் கூறினார்.

மேலும், மோட்டார் சைக்கிள்கள் (168), லாரிகள் (28), வேன்கள் (30), பேருந்துகள் (11), டாக்சிகள் (மூன்று), ஒரு சைக்கிள் என்ற எண்ணிக்கையில் விபத்துகள் பதிவாகியுள்ளன என இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒப் செலாமட் 19 ஜனவரி 18 முதல் 27 வரை நாடு முழுவதும் சீனப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படுகிறது.


Pengarang :