NATIONAL

வேன் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்

கோலாலம்பூர், பிப் 9: நேற்று பிற்பகல், பகாங் அருகே உள்ள ஜாலான் கெந்திங் ஹைலண்ட் கிலோமீட்டர் 4.8 இல் வேன் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறுகையில், விபத்தில் இறந்தவர்கள் வோங் சௌன் சியெட் (ஓட்டுனர்), 49; வோங் ஹா லன் (67), லீ மோய் (67); கோ சியூ கிம் (61), ஆங் மெங் ஹிங் (62), சியாவ் மீ தின் (72) மற்றும் சாங் தெம் கோங் (70).

கெந்திங் மலையிலிருந்து 13 பயணிகள் பினாங்குக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம், அவர்கள் பயணித்த வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் உள்ள கான்கிரீட் சாலை மீது மோதியதாக காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.

“விபத்தில் வேனின் ஓட்டுநர் ஐந்து பயணிகளுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறப் பயணிகள் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்” என்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :