SELANGOR

காயூவான் சன்தாய் @ ஹிஜாவ் லெஸ்டாரி நிகழ்வில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்- கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், பிப் 11: கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (MPKS) எதிர்வரும் பிப்ரவரி 25 அன்று காயூவான் சன்தாய் @ ஹிஜாவ் லெஸ்டாரி எனும் நிகழ்வில் பங்கேற்கப் பொதுமக்களை அழைக்கிறது.

போரஸ்ட் பார்க், பண்டார் ஹில்பார்க், புன்சாக் ஆலம் ஆகிய இடங்களில் காலை 7.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று உள்ளூர் அதிகாரசபை (பிபிடி) முகநூல் மூலம் அறிவித்தது.

“இந்த நிகழ்வு மலேசியச் சாதனை புத்தகத்திலும் பட்டியலிடப்படும்.

“பங்கேற்பு இலவசம் மற்றும் பங்கேற்பாளர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவார்கள். மேலும், அவர்கள் அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள்” என்று கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள பொதுமக்கள் shorturl.at/hlBU9 என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம் அல்லது மேலும் தகவல்களுக்கு 019-613 8164 (அஸ்ரூல்) என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :