NATIONAL

ஜொகூரில் வெள்ள நிலைமை சீரடைகிறது- நிவாரண மையங்களில் இன்னும் 36,086 பேர் அடைக்கலம்

ஜொகூர் பாரு, மார்ச் 15 – ஜொகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது. நேற்றிரவு 8.00 மணியளவில 37,503ஆக இருந்த துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியளவில் 36,086ஆக குறைந்துள்ளது.

இம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 116 நிவாரண மையங்களில் 10,157 குடும்பங்கள் இன்னும் அடைக்கலம் நாடியுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

பத்து பஹாட் மாவட்டத்தில் மிக அதிகமாக 35,849 பேரும் மூவாரில் 111 பேரும் சிகாமாட்டில் 102 பேரும் தங்காக்கில் 24 பேரும் தொடர்ந்து துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

பத்து பஹாட்டில் உள்ள இரு ஆறுகள் அதாவது சுங்கை பெக்கோக் மற்றும் சுங்கை செங்கேராங் ஆகியவற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதாக அச்செயல்குழு தெரிவித்தது. இம்மாநிலத்திலுள் பத்து மாவட்டங்களிலும் வானிலை இன்று காலை
தெளிவாகக் காணப்பட்டது.


Pengarang :