NATIONAL

போலீஸ் தினக் கொண்டாட்டத்திற்கு நன்கொடை கோரப்பட்டதா? சிலாங்கூர் போலீஸ் மறுப்பு

ஷா ஆலம், மார்ச் 23- அண்மையில் நடந்து முடிந்த 216வது போலீஸ்
தினத்தைக் கொணடாடுவதற்கு நிதியுதவி கோரி தாங்கள் கடிதம்
வெளியிட்டதாகக் கூறப்படுவதைச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை
மறுத்துள்ளது.

டெலிகிராம் செயலி வாயிலாகப் பகிரப்படும் அந்த கடிதத்தைத் தாங்கள்
வெளியிடவில்லை என்று சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

சிலாங்கூர் மாநிலக் காவல் துறைதலைமையகத்தினால் வெளியிடப்பட்டதாகக்
கூறப்படும் அந்த கடிதத்தை எடிசி சியாசாட் செயலி பதிவேற்றம்
செய்திருந்தது. போலீஸ் தினத்தைக் கொண்டாடுவதற்கு 50,000 வெள்ளி
தேவைப்படுவதாகவும் நன்கொடை வழங்க விரும்புவோர் நிறுவனம்
ஒன்றில் வங்கிக் கணக்கில் அத்தொகையைச் சேர்க்கலாம் என்றும் அந்த
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நம்பகத்தன்மை இல்லாத வட்டாரங்களில் வெளியிடப்படும் தகவல்களை
வெளியிடவோ பகிரவோ வேண்டாம் என பொது மக்களை நாங்கள்
கேட்டுக் கொள்கிறோம் என்று டத்தோ ஹூசேன் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

போலிச் செய்திகள் அல்லது தகவல்களைப் பரப்புவோர்
கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :